ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை : இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் 18வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வந்தடைந்தார். இன்று மதியம் 3 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை(செப் 12) மற்றும் நாளை மறுநாள்(செப் 13) டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இம்மாநாட்டிற்கு 4 வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.