Select Location
All Locations
State
Region
City / District
திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!

திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.


Malaimalar 11 days ago
Home Flash News