Select Location
All Locations
State
Region
City / District
குன்னூர் விநாயகர் கோயிலில் ரூ.15 கோடியில் அடுக்கு நிலை வாகன நிறுத்தம் கட்டும் பணி ரத்து: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

குன்னூர் விநாயகர் கோயிலில் ரூ.15 கோடியில் அடுக்கு நிலை வாகன நிறுத்தம் கட்டும் பணி ரத்து: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: நீலகிரி மாவட்டம், குன்னூர் விநாயகர் கோயிலில் ரூ.15 கோடியில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: 2024-25ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் மற்றும் நகர் விநாயகர் கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் மற்றும் நகரில் உள்ள விநாயகர் கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிக்கு ரூ.10.36 கோடிக்கு மருதமலை, சுப்ரமணியசுவாமி கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாத, வருவாய் குறைந்த அளவில் இருக்க கூடிய இந்த கோயிலுக்கு மருதமலை கோயில் உபரி நிதியில் இருந்து வட்டியுடன் கூடிய கடனை பெற்று இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்க கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இத்திட்டம் துவங்கப்படாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு இதன் கட்டுமான பணிகளுக்கான ஆணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Dinakaran 2 hours ago
Home Flash News