Select Location
All Locations
State
Region
City / District
கடும் எதிர்ப்பையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் தனிப்பிரிவுக்கான புகார் பெட்டி அகற்றம்

கடும் எதிர்ப்பையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் தனிப்பிரிவுக்கான புகார் பெட்டி அகற்றம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவுக்கான புகார் பெட்டி அகற்றபட்டுள்ளது. இனி தலைமைச் செயலகத்துக்குள் சென்று முதல்வர் தனிப்பிரிவில் மக்கள் புகார் மனு அளிக்கலாம். கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து புகார் பெட்டி அகற்றப்பட்டது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற மாற்றம் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பழைய நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்தது . முன் அனுமதி பெற்ற பார்வையாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் முகவரி துறைக்கு மனு அளிக்க வருபவர்கள் தனியாக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் மனுக்களை போடலாம் என தகவல். தவெக அரசு அமைந்த பின் தினமும் அதிகம் பேர் தலைமைச்செயலகம் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை என விளக்கம் அளித்தது.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு (Secretariat) வரும் பார்வையாளர்களின் வருகைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் அதற்கான பொதுவான நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அரசுப் பணிகள் தொய்வின்றி நடப்பதற்காகவும் தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம் பொதுவாக பார்வையாளர்கள் அனைத்து நேரங்களிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமாக மதியம் 2:00 மணி அல்லது 3:00 மணிக்கு மேல் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலில் உள்ள வரவேற்பறையில் (Reception) உங்களின் பெயர், முகவரி, மற்றும் யாரைப் பார்க்க வருகிறீர்கள் என்ற விவரத்தைக் கூறி பார்வையாளர் அட்டை பெற வேண்டும். பார்வையாளர் அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசிடமிருந்து பெற்ற ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாகும். நுழைவாயிலில் பலத்த பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சில உயர் பாதுகாப்புப் பிரிவுகள் அல்லது குறிப்பிட்ட அமைச்சர்களின் அறைகளுக்குச் செல்லும்போது அலைபேசிகளை வெளியில் ஒப்படைக்கவோ அல்லது பயன்படுத்தாமல் இருக்கவோ அறிவுறுத்தப்படலாம். இந்நிலையில் முதல்வர் தனிப்பிரிவுக்கான புகார் பெட்டி அகற்றபட்டுள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து புகார் பெட்டி அகற்றப்பட்டது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற மாற்றம் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பழைய நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.


Dinakaran 2 hours ago
Home Flash News