ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தால் அதையும் விட்டுவைக்க மாட்டேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன.
இதனால் ஈரான் அந்த இரண்டு நாடுகளின் ராணுவத்திற்கு எதிராகவும் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. வளைகுடா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதில் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.