ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. நடப்பு ஆசிய கோப்பையில் தோல்வியே தழுவாத இந்திய அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் அபாரமாக கோலடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.