கும்பகோணம்: “மாசி மகாமகத்தை ஒட்டி கும்பகோணத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வரும் செப்.10-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்” என வேளாண் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களில் பல ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வாய்க்கால்களில் காவிரி நீர் செல்ல ஏதுவாக கும்பகோணம் கொட்டையூரிலிருந்து மேலக்காவேரி வரை 2.50 கி.மீ. தூரம் மண்டி உள்ள காட்டாமணி மற்றும் செடி கொடிகளை பொக்லீன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.