விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை புனரமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தப் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியையும் பயண எளிமையையும் கணிசமாக மேம்படுத்துவதோடு, அந்தப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.