இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
டெல்லி: இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது. வங்க கடலில் சந்தேகத்திற்கிடமான இழுவைப்படகு சுற்றித் திரிவதை இந்திய கடலோர காவல்படை கண்டறிந்துள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேச கடலோர காவல்படை இரண்டு இழுவை படகுகளை கைது செய்தது.