அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகம் இரட்டிப்பு: பிரதமர் மோடி உறுதி
அம்மான்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகமானது 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள்அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார். நேற்று பிரதமர் மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவும் தலைநகர் அம்மானில் நடந்த இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்கள்.