Select Location
All Locations
State
Region
City / District
/பெட்ரோல், டீசல் விலை 10 நாளில் 4 முறை உயர்வு - இந்திய அரசு நெருக்கடியை கணிக்க தவறிவிட்டதா?

இந்தியாவின் பெட்ரோலிய நிறுவனங்கள் மே 15 முதல் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107 ரூபாய் 77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 99 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இருந்து, மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் நெருக்கடி ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை பாதித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது கடந்த ஆறு மாதங்களில் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 60-65 டாலராக இருந்தபோது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

இருப்பினும், அதன் பிறகு, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் சுமார் 6.9 சதவீதமாக மட்டுமே இருக்கக்கூடும் என்று 2026 மே மாதத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


BBC Tamil 54 minutes ago
Home Flash News