எம்.பி.க்களுக்கு கிடுக்கிப்பிடி: பாராளுமன்றத்திற்குள் மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடை..!
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் லோக்சபாவிற்குள் 'இ-சிகரெட்' பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் பல்வேறு தருணங்களில் எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை விதிமீறி படம் பிடித்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இத்தகைய ஒழுங்கீனமான செயல்களைத் தடுக்கும் பொருட்டு, லோக்சபா செயலகம் தற்போது அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.