தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!
சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 9 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.