நேற்று பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டிருந்தார். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொண்டிருந்தனர்.