கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு விஜயின் தாமதம்தான் முக்கிய காரணம்: உண்மை கண்டறியும் குழு அறிக்கை
சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு யாருடைய சதியும் உள்நோக்கமோ இல்லை என்று உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் துயரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தொழிலாளர்கள், காவல்துறை, வழக்கறிஞர்களை சந்தித்து உண்மைகளை திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சரசுவதி தலைமையிலான குழு உண்மைத் தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் 13 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அக்.9, 10ல் ஆய்வு நடத்தியது. குழு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி, உறுப்பினர்கள் ஜாக்லின், எப்.மேரி லில்லிபாய், வழக்கறிஞர் சுதா காந்தி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.